Difference between revisions of "பூக்கள் பூக்கும் தருணம்"

From HORTS 1993
Jump to navigation Jump to search
All>Raj
All>Raj
Line 55: Line 55:


பஸ் ஸ்டாண்ட் வந்து வடவள்ளி பஸ் ஏறி உட்கார்ந்ததும், கனமாய் மழை துவங்கியது. சடசடவென்று அடித்துப் பெய்தது. பஸ்ஸின் முன்னால் வைப்பர்கள் மிக வேகமாய் அசைந்தன. கண்ணாடி ஜன்னல் வெளியே ரோட்டோர வரிசைக் கடைகளின் விளக்கு வெளிச்சங்கள் மழையில் கரைந்திருந்தன. நல்லவேளை, கார்டன் ஸ்டாப்பில் இறங்கும்போது, மழை குறைந்து நிதானித்து தூறிக்கொண்டிருந்தது. கேட்டில் நுழைந்து, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் வரிசையில் சைக்கிளை எடுக்கும்போது கீழே பார்த்தேன். நத்தை ஒன்று கூடுதூக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
பஸ் ஸ்டாண்ட் வந்து வடவள்ளி பஸ் ஏறி உட்கார்ந்ததும், கனமாய் மழை துவங்கியது. சடசடவென்று அடித்துப் பெய்தது. பஸ்ஸின் முன்னால் வைப்பர்கள் மிக வேகமாய் அசைந்தன. கண்ணாடி ஜன்னல் வெளியே ரோட்டோர வரிசைக் கடைகளின் விளக்கு வெளிச்சங்கள் மழையில் கரைந்திருந்தன. நல்லவேளை, கார்டன் ஸ்டாப்பில் இறங்கும்போது, மழை குறைந்து நிதானித்து தூறிக்கொண்டிருந்தது. கேட்டில் நுழைந்து, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் வரிசையில் சைக்கிளை எடுக்கும்போது கீழே பார்த்தேன். நத்தை ஒன்று கூடுதூக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
==Episode 4 | மரமல்லி ==
”வீட்லருந்தே தண்ணி, பாட்டில்ல கொண்டு வந்துருக்கலாம். உனக்கு எதுதான் ஞாபகமிருக்கு? நீதான் அசமஞ்சமாச்சே...இரு வர்றேன்” சிவகாமி பஸ்ஸிலிருந்து இறங்கி, ரோடு தாண்டி எதிர் வரிசை கடைக்குச் சென்றார்.
மேலூர் பேருந்து நிலையம் இரவுக்குள் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. சோடியம் வேப்பர்களும், மெர்க்குரிகளும் ஒளிரத் தொடங்கியிருந்தன. பரோட்டா கடைகள் சுறுசுறுப்பாகியிருந்தன. மணி ஆறரை ஆகியிருந்தது. சிவகாமி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்தார்.
நாங்கள், மதுரை பெரியார் நிலையம் போகும் பேருந்தில் பின் படிக்கட்டுகளின் எதிரில் ஒரு இரட்டை சீட்டில் உட்கார்ந்திருந்தோம். மதுரை பேருந்துகள் எல்லாம், பேருந்து நிலையத்திற்கு வெளியில்தான் வரிசை கட்டி நின்றிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பேருந்துக்கு முன்னால், இரண்டு மதுரை பேருந்துகள் நின்றிருந்தன. பஸ்ஸில் விளக்கு போட ஏறிய கண்டக்டர், “முன்னால நிக்கிற வண்டிதான் முதல்ல எடுப்பாங்க, அதுல ஏறிக்குங்க’ என்றார். பேசிக் கொண்டிருக்கலாம் என்று வேண்டுமென்றேதான் மூன்றாவது பேருந்தில் ஏறியிருந்தோம். சிவகாமி “பரவால்லைங்க” என்றார். கண்டக்டர் விளக்கு போட்டுவிட்டு கீழிறங்கிப் போனார். “அவரு நம்மளப் பத்தி ஏதாவது தப்பா நினைச்சிருப்பாரோ?” என்றேன். சிவு சிரித்துவிட்டு “நினைச்சா நினைச்சிக்கட்டும்” என்றார்.
சிவு வீட்டிற்கு இன்று காலையில் 10 மணிக்கு வந்தது; இப்போதுதான் கிளம்புகிறேன். விளையாட்டுக்களும், உணவும், சந்தோஷமுமாய்...நேரம் எப்படி பறந்ததென்றே தெரியவில்லை. சிவு என்னுடன் கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை படிக்கிறார். சிவுவின் அப்பா, மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார். சிவு-விற்கு இரண்டு தங்கைகள். மேலூரிலேயே பள்ளியில் படிக்கிறார்கள். சிவு-வின் அம்மா, வேண்டாமென்று சொல்லியும், முறுக்கும் சிப்ஸூம் கவரில் போட்டு “போகும்போது சாப்பிடு, வீட்டுக்குப் போறதுக்கு ஒன்பது மணி ஆயிடுமே” என்று பையில் வைத்தார்கள். என் வீடு திருமங்கலத்திலிருந்தது. சிவு-வும் ஒருமுறை திருமங்கலம் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
”இருட்டிடுச்சே, நீ கிளம்பி வீட்டுக்குப் போ சிவு. அம்மா வெய்ட் பன்ணிட்டிருப்பாங்க. நான் போய்க்கிறேன்” என்றேன். “பரவால்ல இங்கதான வீடு அஞ்சு நிமிஷத்துல போயிடுவேன். உனக்கென்ன இப்ப...நான் உட்கார்ந்திருக்கேன்; காலேஜிலதான் உம்மணாம்மூஞ்சியாட்டம் பேசவே மாட்ட; இப்பயாவது பேசு, நான் கேட்கிறேன்; பாலாவோட என்ன புக் படிச்சிட்டிருக்க?” என்று கேட்டார். சிவு-வின் வீடு, பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து நிமிட நடையில், கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் பக்கத்திலிருந்தது. நான் “திருப்பூந்துருத்தி” என்றேன். ”நல்லாருக்கா, என்ன கதை?” “எனக்கு புக் படிக்கத்தான் தெரியும், சரியா சொல்லவராது. நல்லாருக்கு. முடிச்சதும், தர்றேன்” என்றேன்.
பேச்சு, சுற்றிச் சுற்றி, கல்லூரி, நண்பர்கள் மத்தியிலேயே சுழன்றது. கல்லூரி வாழ்க்கையில், சிவு மாதிரி, ஒரு நெருக்கமான, வெளிப்படையான, எதுவென்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு பெண் நட்பு கிடைத்தது கடவுள் தந்த வரம். சமயங்களில் ப்ராக்டிகல் ரிகார்டு பண்ணித் தரச் சொல்லியிருக்கிறேன். “அன்னன்னிக்கு நடத்துறத அன்னன்னைக்கு கொஞ்சமாவது ரூம்ல திருப்பிப்பாரு. ட்ரைமெஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குற வரைக்கும் தூங்காத...” என்று கடிந்துகொண்டிருக்கிறார். “எனக்கென்னவோ, நீ மேனகாவப் பாத்து ஜொள்ளு விடறமாதிரி இருக்கு...” என்றார் ஒரு நாள்.
சிவு, வேளாண் பொறியியல் படிக்கும் ஒரு நண்பர் குழுவுடன் மிகவும் நெருக்கம். அக்குழுவில் குரு, சாந்தி, பழனி, சரஸ்வதி, ஹேமா, குமார் இன்னும் சிலருண்டு. சிவு நட்பாய் எல்லோருக்கும் நெருக்கம் என்றாலும், குமாரின் மேல் நட்பு தாண்டிய ஒரு ப்ரியம் உண்டு. குமார் குடும்பத்தில், குமார்தான் முதன்முதலில் தலையெடுத்து, கல்லூரி வரை வந்திருப்பவன்; ஏழைக் குடும்பம். குடும்பப் பொறுப்புகள் அதிகம். ஒருமுறை சிவு, வகுப்பு இடைவேளையில், செமினார் ஹாலுக்கு வெளியே சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது “நான் குமார்கிட்ட லவ்வ சொல்லிட்டேண்டா” என்றார். நான் புன்னகைத்து “என்ன சொன்னான்?” என்றேன். “நான் யோசிச்சி சொல்றேன்”னான். எனக்கு பொறுப்புகள் ஜாஸ்தி. என்னோட குடும்ப சூழ்நிலை தெரியும்தான? இது சரிவருமான்னு தெரியல”-ன்னான். ”எனக்கு இன்னும் அவன்மேல இருக்குற மதிப்பு ஜாஸ்தியாயிடுச்சு” என்றார். ”உனக்கு என்ன தோணுது? நான் ஏதும் அவசரப்பட்டு அவனை தொந்தரவு பண்ணிட்டேனோ...” என்று கேட்டார். “எனக்குத் தெரியல சிவு. நீயா சொல்லிட்டது நல்லதுதான்னு படறது. எனக்கு இந்த வயசுல காதலப் பத்தி தெளிவா ஒரு முடிவுக்கு வரமுடியல. நான் கனவுலயே இருக்கேன்னு விஸ்வா சொல்றான். எந்த நேரமும் கலைஞ்சி கீழ இறங்கிடுவே, கவனமாயிரு”-ன்னு பதட்டப்பட வைக்கிறான். குமார்கிட்ட சொல்லிட்டதான, பார்ப்போம். எல்லாம் சரியா வரும்னுதான் எனக்கு தோணறது” என்றேன். “உனக்கு லவ்வெல்லாம் வரலையா?” சிரித்துக்கொண்டே சிவு கேட்டார்.
“உன்ன மாதிரி நெருக்கமா நட்பிருக்கும்போது லவ்வுக்கு என்ன அவசரம்?” என்றேன். ”ஃபிஸிகல் காண்டாக்ட், அது சார்ந்த முயற்சிகள் எல்லாம் வேடிக்கையாத்தான் தோணுது சிவு. இப்போதைக்கு எனக்கு தூரமாத்தான் இருக்கு. நான் சோகமா இருக்கும்போது “ஏண்டா, ஏதாவது ப்ரச்னையான்னு” கேட்டு நீ கைபிடிச்சுக்குவயே...அன்பு பூசின அந்த மாதிரி தொடல்களே எனக்குப் போதும்” என்றேன். “சரி...சரி...உன் தத்துவங்களை ஆரம்பிச்சிராத...” என்று நிறுத்தினார்.
பஸ்ஸில் இருக்கைகள் நிரம்பியிருந்தது. கண்டக்டர் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். நான் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவுவின் வலதுகை விரல்களைப் பிடித்துக்கொண்டு “அப்பாகிட்ட சொல்லிட்டியா சிவு, குமாரப் பத்தி?” என்று கேட்டேன். “சொல்லிட்டேன். ரெண்டு மூணு மாசமாகும் பதில் சொல்ல. ப்ராக்டிகலா யோசிக்கணும். அதுவரைக்கும் அமைதியா இருக்கச் சொல்லியிருக்கிறார்” என்றார். நான் மனதுக்குள் சிவு-வின் அப்பாவை வணங்கிக்கொண்டேன்.
பஸ்ஸினுள் ட்ரைவர் ஏறினார். ‘சரி, நான் கிளம்பறேன். வீட்ல அம்மா, பாட்டி, தம்பிங்க எல்லோரையும் விசாரிச்சதா சொல்லு” கைபிடித்து அழுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து சிவு இறங்கிக்கொண்டார். பஸ் கிளம்பி மெதுவாய் நகர்ந்தது. சிவு ரோடு தாண்டி மறுபுறம் போய் கடைவீதி தெருவில் நுழைந்து திரும்பி நின்று கையசைத்தார். நானும் பஸ்ஸினுள்ளிருந்து கையசைத்தேன். சிவு-வின் வெள்ளை சுடிதாரும், வானவில் கலர் துப்பட்டாவும் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் பளபளப்பு ஏறித் தெரிந்தது. எனக்கு அலங்காநல்லூரில் டாக்டர் அத்தை வீட்டு முன் இருக்கும் மரமல்லி ஞாபகம் வந்தது. எனக்குப் பிடித்த மல்லிகள் கீழே உதிர்ந்து கிடக்கும் மரம்...
சிவு...என் ப்ரியமான தோழியே...
==Episode 5==

Revision as of 19:58, 13 November 2018


Episode 1

அவை கோவை வருடங்கள். 89-லிருந்து 93-வரை. கோவை வேளாண் பல்கலையில் இளங்கலை தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தேன். என் வகுப்பில் நானும், உடன் பயின்ற மதுரை புதூர் சிவகாமியும், அதே வருடம் வேளாண் பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் ஐந்து பேரும், மாணவிகளில் நான்கு பேருமாக நாங்கள் பதினோரு பேரும் ஒரு செட்டாகத்தான் சுற்றித் திரிவோம். சினிமாவிற்குப் போவதென்றாலும், வகுப்பு முடித்து மாலை கோவிலுக்குப் போவதென்றாலும், விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்காவில் பேசிக் கொண்டிருப்பதேன்றாலும் அனைவரும் பெரும்பாலும் சேர்ந்துதான் செல்வது. அந்த நாட்களின் மருதமலை கோவிலும், வடவள்ளி செல்லும் வழியிலிருந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலும், வேளாண் பல்கலையின் இரண்டாம் பஸ் நிறுத்தத்திலிருந்த பூங்காவும், கேஜி-யின் சினிமா தியேட்டர்களும்...மறக்கமுடியாதவை. எங்களின் பதினோரு சைக்கிள்களுமே பத்தாயிரம் கதைகள் சொல்லும்.

எங்கள் குரூப்பில் இருந்த வேளாண் பொறியியல் சாந்திக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது. இரண்டு வீட்டாராலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். கணவர் கண்ணன் பல்கலையின் பக்கத்திலிருந்த பி.என்.புதூரில் ஜவுளிக்கடை ஒன்று வைத்திருந்தார். கண்ணனும், சாந்தியும் பி.என். புதூரில் வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். இருவரும் மிகப் பொருத்தமான, அட்டகாசமான ஜோடி. அடுத்த ஒரு வருடமும் சாந்தி புதூரிலிருந்துதான் கல்லூரிக்கு வந்துசென்றார். அதன்பின், கண்ணனும் எங்கள் செட்டில் இணைந்து கொண்டார். நாங்கள் வழக்கமாக ஜமா போடுமிடங்களில், கண்ணனின் ஜவுளிக் கடையும், பி.என்.புதூரில் கண்ணன் சாந்தி அவர்களின் வீடும் சேர்ந்துகொண்டது. சாந்தியின் வீட்டில் சனி இரவுகளில், நள்ளிரவு வரை கூட பேச்சுக் கச்சேரி நடக்கும். சிரிப்பும், மகிழ்ச்சியுமாய்...பசுமையாய் இன்றும் நினைவிலிருக்கும் நாட்கள்.

குரூப்பில் சரஸ்வதி நன்றாக பரதம் ஆடக் கூடியவர். மேட்டூரைச் சேர்ந்த குருவிற்கு, சாந்தியின் மேல், திருமணத்திற்கு முன்பு மெல்லிய இன்ஃபேச்சுவேசன் இருந்தது. அது சாந்தியின் திருமணத்திற்குப் பின்பு, சாந்தியின் மேல் மிகப் பெரும் மரியாதையாகவும், பெரும் அன்பாகவும் பரிமாணம் கொண்டது. குரு ஓர் ப்ரமாதமான ஓவியன். எங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் நாங்கள் முதலில் பகிர்ந்துகொள்வது கண்ணனிடமும், சாந்தியிடமும்தான். திருமணத்திற்குப் பிறகு சாந்தி மிகவும் மெச்சூர்டாக மாறிப் போனார். குரு கொஞ்சம் எமோஷனல் டைப். ஒவ்வொரு முறையும் ஏதேனும் விஷயங்களில் குரு எமோஷனல் ஆகும்போதெல்லாம், அறிவுரை சொல்லி அமர்த்துவது சாந்திதான்.

ஒருநாள் வெள்ளி நள்ளிரவு தாண்டிய பின்னிரவு. நானும் குருவும், நாங்கள் தங்கியிருந்த கல்லூரியின் தமிழகம் விடுதியின் மொட்டை மாடியில் இருட்டில் உட்கார்ந்திருந்தோம். விடுதி முழுதும் உறக்கத்திலிருந்தது. தூரத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் சோடியம் வேப்பர்களின் மஞ்சள் வெளிச்சம். பேச்சின் கனத்தில் குரு உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் குரல் தழுதழுத்திருந்தது. நான் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து “சரி, போய்ப் படுப்போம். நாளைக்கு காலையில ஏழு மணிக்கு ப்ராக்டிகல் க்ளாஸ் போகணுமில்லையா?” என்றேன். கீழே குரு அறைக்கு வந்ததும், டேபிளின் மேலிருந்த செய்தித்தாள் அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தான். “இதப்படி” என்றான். ”சரி” என்று சொல்லிவிட்டு அவனைத் துங்கச் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்தேன். எனக்கு இன்றைக்கு தூக்கம் வராது என்று நினைத்தேன். விளக்கைப் போட்டு, புத்தகத்தை பிரித்தேன்.

அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிதாகப் பத்தகம் வாங்கினால், அதை எங்கு, எப்போது வாங்கினோம் என்று புத்தகத்திலேயே எழுதிவைப்போம். எழுத்தாளர்கள் டெடிகேட் செய்வதுபோல், நாங்களும் யார் நினைவாக புத்தகம் வாங்கினோம் என்று முதல் பக்கத்தில் எழுதுவோம். குரு அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தான் “என் அம்மாவைப் போன்ற...என்னை எப்போதும் ஆற்றுப்படுத்தும்...சாந்திக்கு...”

அப்புத்தகம்...பிகேபி-யின் ”தொட்டால் தொடரும்”...


மழை பெய்யும் காடு...என் கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத இரு பயணங்கள்/இரு வகுப்புகள் குறிஞ்சியில் நான் கழித்த நாட்கள். ஒன்று வால்பாறையில் நாங்கள் பங்குகொண்ட தேயிலை தொடர்பான பயிற்சி வகுப்புகள். மற்றொன்று ஏற்காட்டில் - காபி பயிர் தொடர்பாக. பயிற்சிக் காலங்களில் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பண்ணைகளில் அங்கேயே தங்கியிருப்போம். அந்த நாட்களில் நான் அடைந்த பரவசங்களை, இனிய நினைவுகளை எல்லாம் ஒவ்வொரு முறை மலைப் பயணமும் மேல் கொண்டு வரும். தடியன் குடிசை, பேச்சிப் பாறை, கல்லார் மற்றும் பர்லியார், குன்னூர்...வகுப்புகளுக்காகப் பயணித்த எல்லா இடங்களும் அந்த அடர் வனத்தின், குளிரின் மணத்தோடு உள்ளெழுகின்றன.

Episode 2

தேயிலை பயிர் பயிற்சிக்காக வால்பாறையில் தங்கியிருந்தபோது, ஒருநாள், பக்கத்திலிருக்கும் தனியார் பண்ணையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரிப் பேருந்தில் சென்று இறங்கியதும், பண்ணையின் மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பண்ணை இயங்கும் முறைகள் பற்றி சிறு அறிமுகம் தந்துவிட்டு, பண்ணையை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். நானும் கொஞ்சதூரம் சென்றுவிட்டு, சரிவுகளில் ஏறி இறங்க முடியாமல், திரும்பி வந்து பேருந்து அருகில் நின்றுகொண்டேன். மழை வரும்போலிருந்தது. மேகங்கள் அடர்த்தியாய் மூடியிருந்தன. ஸ்வெட்டரை மீறியும் குளிர் இருந்தது. பேருந்து ஒரு மரத்தினடியில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம். அலுவலகமாகவோ ஸ்டோராகவோ இருக்கவேண்டும். பக்கத்தில் சிமெண்ட் தளம் போட்ட நீண்ட அகலமான களம்.

மழை மெலிதாய் தூற ஆரம்பித்தது. பேருந்தினுள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூரத்தில் சரிவில் வரிசை வீடுகள் தெரிந்தன. மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போதெல்லாம் ஏன் மனம் சட்டென்று அமைதியாகி விடுகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிதானம் புகுந்துவிடுகிறது. குன்னூர், ஊட்டி பயணிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். மேட்டுப்பாளையம் வரை இருக்கும் மனது வேறு. மேலே ஏற ஆரம்பித்ததும் மனம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிடும்.

பேருந்தை நோக்கி ஒரு குட்டிப்பெண் ஒரு ப்ளாஸ்டிக் கூடையைத் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து அருகில் வந்து “மாமா...” என்றது. நான் கீழிறங்கி “என்ன பாப்பா...” என்றேன். முகத்தில் தூய்மையும், விகசிப்பும். கூடையை என்னிடம் கொடுத்து “அம்மா எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க...” என்றது. கூடை நிறைய பழங்கள்; ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும். நான் வாங்கிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் குட்டி...மழை தூறுதே... அப்பறமா வந்துருக்கலாமே...” என்று சொல்லிவிட்டு “பாப்பா பேரென்ன...வீடு எங்கயிருக்கு?” என்றேன். “கயல்” என்று சொல்லிவிட்டு தூரத்து வரிசை வீடுகளை சுட்டிக்காட்டியது. நண்பர்களும், மேலாளரும் மழையினால் சீக்கிரமே திரும்பினர். “இவங்க கயல்...நமக்கு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்துருக்காங்க...” என்று நண்பர்களிடம் சொன்னேன். நண்பிகள் கயலின் கன்னம் நிமிண்டினார்கள். கயல் சிரித்துக்கொண்டும், நெளிந்துகொண்டும் எங்கள் மத்தியில் குட்டி தேவதை போல் உரையாடியது. காலி கூடையை திரும்ப வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடியது. எனக்கு மாமாவின் குட்டிப் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள். கூடவே அம்மாவின் ஞாபகமும், வகுப்புத் தோழி மேனகாவின் முகமும். மேனகா என்ன செய்கிறார் என்று கண்கள் துழாவியது. மேனகா கலாவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். சிரிக்கும் மேனகாவின் சித்திரம் உள்ளுக்குள் பதிந்துபோனது அன்றுதான். மேனகாவின் முகத்தில்தான் எத்தனை தூய்மை?

ஏற்கனவே மலையின், மழையின் நெகிழ்விலிருந்தேன். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து தூறல் அதிகமாகியது. தூரத்தில் கயல் விரைவது தெரிந்தது. பேருந்தினுள், பையில் ஸ்நாக்ஸ்கள் இருந்தன. கயலுக்கு கொடுத்திருக்கலாம். மறந்துவிட்டது. அந்த நாளின், அந்த நேரத்தின், மனதில் வெண்மையும் நெகிழ்வும் தாய்மையும் ஏறிய அந்தக் கணம்...

காடு கடவுள்தான் இல்லையா?...


Episode 3 | நத்தை கூடுகள்

"இப்ப என்னதான் பிரச்னை உனக்கு?” விஸ்வா கேட்டான். நானும் விஸ்வாவும் யுனிவர்சிடி கேண்டீனின் வலதுபக்க படிகளில் உட்கார்ந்திருந்தோம். மணி இரவு பதினொன்றிருக்கலாம். விஸ்வா மேல் படியிலும், நான் அடுத்த கீழ் படியிலும் உட்கார்ந்திருந்தோம். கேண்டீன் முன்னால் ஆர்ச்சேர்டு போகும் வழியிலிருந்த சோடியம் விளக்கிலிருந்து வெளிச்சம், மரத்தின் இலைகளினூடே புகுந்து எங்கள்மேல் தெளித்திருந்தது. நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் ஆசிரியர் விடுதி இருளிலிருந்தது.

“நீ மேனகாவ லவ் பண்றியா?”. இல்லை என்பதாய் தலையசைத்தேன். “அப்புறம், இது வெறும் இன்ஃபேச்சுவேவேஷன்தான்-னு நினைக்கிறேன். ஏன் இதுக்கு போயி இவ்வளவு அலட்டிக்கிற?” விஸ்வாவின் குரலில் மெல்லிய கோபமிருந்தது. அவன் கோபப்படுவதிலும் நியாயமிருக்கிறது. தினமும் முன்னிரவு வேளையில், அவனைப் பிடித்து, இம்மாதிரி அரையிருளில் உட்கார வைத்துக் கொண்டு, அன்றைய நாள் முழுக்க மேனகா எப்படி வகுப்புக்கு வந்தார், என்ன ட்ரெஸ் போட்டிருந்தார், வகுப்பில் என்னென்ன மாதிரி முகபாவங்கள் காட்டினார்...மேனகாவின் உதடுகள் பிரியாமல் சிரிக்கும் அந்தப் புன்னகை எப்படி இருந்தது...நண்பர்களிடம் மெலிதாய்ப் பேசும்போது அவர் முகம் எப்பக்கம் சாய்ந்தது...என்று ஒன்று விடாமல் விவரித்தால்...பாவம் அவனும்தான் என்ன செய்வான்?.

“டேய்...அழறியா?” விஸ்வா கேட்டான். நான் தலைநிமிர்ந்து பெருமூச்சு விட்டு சன்னமாய் கரகரத்து இல்லையென்றேன். கண்களில் நீர் கோர்த்திருப்பதை இருளில் அவன் பார்த்திருக்க முடியாது. கூடைப்பந்து மைதானம், மஞ்சள் வெளிச்சத்தில் நனைந்திருந்தது. தூரத்தில் தமிழகம் விடுதியில் இன்னும் பல அறைகளில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. தாமு அறையில் வெளிச்சமில்லை. ”மேனகா கல்யாணமே பண்ணிக்கக்கூடாது-னு தோணறது விஸ்வா” என்றேன். ”அடப்பாவி, நீ நார்மலாதான் இருக்கியா?” என்று கேட்டுவிட்டு “இதுக்குதான் அதிகமா புக் படிக்கக்கூடாதுங்கறது. இப்ப பாரு. எதையுமே ப்ராக்டிகலா யோசிக்க மாட்டியா நீ?. எப்பப் பாரு எதையாவது படிச்சிட்டு கனவுலயே மிதந்துட்டிருக்கிறது” அவன் குரலின் எள்ளல் என்னைத் தொடவேயில்லை.

“மேனகா மாதிரி...அந்த முகம்...அந்த தெய்வீகம்...கல்யாணமாகி ஒரு ஆணோட, ஒரு சராசரி லௌகீக வாழ்க்கையில என்னால நினைச்சிக்கூட பார்க்கமுடியலடா...கல்யாணமும் காமமும்தான் எத்தனை மலிவான விஷயம்...அந்த அழகு போயும் போயும் இதுக்குத்தானா படைக்கப்பட்டிருக்கும்?”

“அது சரி. முதல்ல இந்த பாலகுமாரனையும், தி.ஜா-வையும் படிக்கிறத நிறுத்து. ரொம்ப ஓவரா போற நீ. மேனகா கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருந்தா பத்தாதா? என்ன உளர்ற நீ?”

“ஆமா, அந்த தூய்மையான முகத்துல கவலையின் ஒரு ரேகை வர்றதையும் என்னால தாங்கமுடியுமானு தெரியல. மேனகாவுக்கு கல்யாணம் ஆச்சின்னா...” நான் மறுபடி தலைகுனிந்து கொண்டேன்.

“ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்க முடியல. எந்திரி நீ முதல்ல...இப்படியே விட்டா, ராத்திரி முழுசும் புலம்பிட்டே இருப்ப...” எழுந்து கைபிடித்து தூக்கிவிட்டான். இருவரும் சைக்கிளில் லாலி ரோடு கிளம்பினோம். கெமிஸ்ட்ரி லேப் தாண்டி, இடதுபுறம் திரும்பி, எங்கள் ஃபேகல்டியை கடந்தோம். பகலில், வகுப்பு இடைவேளையில், ஃபேகல்டிக்குப் பக்கத்திலிருக்கும் மரத்தடியில்தான் டீ குடிப்பது. அண்ணா ஆடிட்டோரியம், முகப்பில் விளக்கு வெளிச்சத்தோடு அமைதியில் இருந்தது. ஆடிட்டோரியத்தின் கீழ்த்தளத்தில் தான் நூலகம் இருந்தது. ஒருமுறை, அசோகமித்திரனின் “18-ஆவது அட்சக்கோடு” புத்தக வரிசைகளில் தேடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாய் மேனகாவை ஒரு புத்தக வரிசையில் பார்த்து, மனம் படபடத்தது ஞாபகம் வந்தது. ஆர்.ஐ கட்டிடத்தைத் தாண்டி, கேட்டில் வெளியே வந்து, மெயின் ரோட்டில் ஏறினோம். விஸ்வா பேசிக்கொண்டே வந்தான். “நீயெல்லாம் புக் படிக்கிறதே வேஸ்ட். பாலகுமாரன், வாசகர்களிடம் இதத்தான் எதிர்பார்ப்பாரா?. ப்ராக்டிகலா, தரையில நிக்க வேண்டாமா?” என்றான். எனக்கு அவன் பேசியது எதுவும் காதில் நுழையவில்லை.

அர்ச்சனா பேக்கரி திறந்திருந்தது. டீ சொல்லிவிட்டு, வெளியிலேயே படியில் உட்கார்ந்து கொண்டோம்.

“இன்னிக்கு காலைல பத்தரைக்கு, மேனகாவோட, செகண்ட் கேட்லருந்து ஆர்ச்சேர்டு வரைக்கும் நடந்து வந்தேன். கூட வளர்மதியும் இருந்தாங்க” என்றேன். “அப்படியே பறந்துருப்பியே...” விஸ்வா சிரித்துக்கொண்டே சொன்னான். ஆம், அந்த சமயம் கொஞ்சமாய்தான் சுயநினைவு இருந்தது. சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்து வந்தோம். நான் பெரும்பாலும் மௌனமாய்தான் நடந்தேன். மேனகாதான் அம்மாவைப் பற்றியும், தம்பிகளைப் பற்றியும் கேட்டுக்கொண்டு வந்தது. உறவினர் ஒருவர், குப்புசாமி ஹாஸ்பிடலில், ஒரு மைனர் சர்ஜரிக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், மறுநாள் மாலை அங்கு தான் போகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

“நாளைக்கு சாயந்திரம் குப்புசாமி ஹாஸ்பிடல் போலாமா?” என்றேன் விஸ்வாவிடம். “போலாம்...போலாம்...இன்னைக்கு நைட் தூங்குவியா?...” என்றான். டீ குடித்துவிட்டு, மறுபடி விடுதி திரும்பி அறைக்கு வந்து படுக்கும்போது மணி இரண்டு.

மறுநாள் வகுப்புகள் முடித்து, மாலை கிளம்பி, சைக்கிளை செகண்ட் கேட்டில் விட்டுவிட்டு, காந்திபுரம் பஸ் ஏறி, குப்புசாமி ஹாஸ்பிடல் ஸ்டாப்பில் இறங்கும்போது மணி ஆறாகியிருந்தது. தெரு விளக்குகள் போடப்பட்டிருந்தன. இரண்டு தெரு தள்ளிதான் ஹாஸ்பிடல் இருந்தது. உள்ளே நுழைந்து, ரிஷப்ஷனில் ரூம் நம்பர் சொல்லி (மேனகா சொல்லிய ரூம் நம்பர் அதுதானா என்று சந்தேகம் வந்தது) எப்படி போகணும் என்று கேட்டபோது, செகண்ட் ஃப்ளோர் போய் வலதுபக்கம் திரும்பச் சொல்லியது ரிஷப்ஷன் பெண். லிஃப்டில் ஏறி இரண்டாம் மாடிக்குச் சென்று, கதவு திறந்து வெளியில் வந்து வலது புறம் திரும்பியதும், மேனகா வராந்தாவிலேயே கண்ணில் பட்டது. நீல நிற உடையில் தேவதை மாதிரி...தேவதையின் குறுஞ்சிரிப்போடு...

விஸ்வா “நீ ஸ்டெடியா இருக்கியா?” என்று காதில் கேட்டான். அறைக்குள் கூட்டிச் சென்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது. பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். விஸ்வா சர்ஜரி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். சின்ன சர்ஜரிதான் என்றும் இரண்டு/மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்றும் உறவினர் சொன்னார். நான் இயல்பாயில்லாமல் ஒரு தவிப்போடுதானிருந்தேன். மனது முழுதும் நீலம் நிறைந்திருந்தது. டீ வந்தது. குடித்தோம். “நாங்க கிளம்பறோம் மேனகா” விஸ்வா எழுந்தான். மேனகா ரிஷப்ஷன் வரை கீழே வந்து, தான் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் வருவதாக சொல்லி வழியனுப்பியது.

பஸ் ஸ்டாண்ட் வந்து வடவள்ளி பஸ் ஏறி உட்கார்ந்ததும், கனமாய் மழை துவங்கியது. சடசடவென்று அடித்துப் பெய்தது. பஸ்ஸின் முன்னால் வைப்பர்கள் மிக வேகமாய் அசைந்தன. கண்ணாடி ஜன்னல் வெளியே ரோட்டோர வரிசைக் கடைகளின் விளக்கு வெளிச்சங்கள் மழையில் கரைந்திருந்தன. நல்லவேளை, கார்டன் ஸ்டாப்பில் இறங்கும்போது, மழை குறைந்து நிதானித்து தூறிக்கொண்டிருந்தது. கேட்டில் நுழைந்து, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் வரிசையில் சைக்கிளை எடுக்கும்போது கீழே பார்த்தேன். நத்தை ஒன்று கூடுதூக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.


Episode 4 | மரமல்லி

”வீட்லருந்தே தண்ணி, பாட்டில்ல கொண்டு வந்துருக்கலாம். உனக்கு எதுதான் ஞாபகமிருக்கு? நீதான் அசமஞ்சமாச்சே...இரு வர்றேன்” சிவகாமி பஸ்ஸிலிருந்து இறங்கி, ரோடு தாண்டி எதிர் வரிசை கடைக்குச் சென்றார்.

மேலூர் பேருந்து நிலையம் இரவுக்குள் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. சோடியம் வேப்பர்களும், மெர்க்குரிகளும் ஒளிரத் தொடங்கியிருந்தன. பரோட்டா கடைகள் சுறுசுறுப்பாகியிருந்தன. மணி ஆறரை ஆகியிருந்தது. சிவகாமி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்தார்.

நாங்கள், மதுரை பெரியார் நிலையம் போகும் பேருந்தில் பின் படிக்கட்டுகளின் எதிரில் ஒரு இரட்டை சீட்டில் உட்கார்ந்திருந்தோம். மதுரை பேருந்துகள் எல்லாம், பேருந்து நிலையத்திற்கு வெளியில்தான் வரிசை கட்டி நின்றிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பேருந்துக்கு முன்னால், இரண்டு மதுரை பேருந்துகள் நின்றிருந்தன. பஸ்ஸில் விளக்கு போட ஏறிய கண்டக்டர், “முன்னால நிக்கிற வண்டிதான் முதல்ல எடுப்பாங்க, அதுல ஏறிக்குங்க’ என்றார். பேசிக் கொண்டிருக்கலாம் என்று வேண்டுமென்றேதான் மூன்றாவது பேருந்தில் ஏறியிருந்தோம். சிவகாமி “பரவால்லைங்க” என்றார். கண்டக்டர் விளக்கு போட்டுவிட்டு கீழிறங்கிப் போனார். “அவரு நம்மளப் பத்தி ஏதாவது தப்பா நினைச்சிருப்பாரோ?” என்றேன். சிவு சிரித்துவிட்டு “நினைச்சா நினைச்சிக்கட்டும்” என்றார்.

சிவு வீட்டிற்கு இன்று காலையில் 10 மணிக்கு வந்தது; இப்போதுதான் கிளம்புகிறேன். விளையாட்டுக்களும், உணவும், சந்தோஷமுமாய்...நேரம் எப்படி பறந்ததென்றே தெரியவில்லை. சிவு என்னுடன் கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை படிக்கிறார். சிவுவின் அப்பா, மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார். சிவு-விற்கு இரண்டு தங்கைகள். மேலூரிலேயே பள்ளியில் படிக்கிறார்கள். சிவு-வின் அம்மா, வேண்டாமென்று சொல்லியும், முறுக்கும் சிப்ஸூம் கவரில் போட்டு “போகும்போது சாப்பிடு, வீட்டுக்குப் போறதுக்கு ஒன்பது மணி ஆயிடுமே” என்று பையில் வைத்தார்கள். என் வீடு திருமங்கலத்திலிருந்தது. சிவு-வும் ஒருமுறை திருமங்கலம் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

”இருட்டிடுச்சே, நீ கிளம்பி வீட்டுக்குப் போ சிவு. அம்மா வெய்ட் பன்ணிட்டிருப்பாங்க. நான் போய்க்கிறேன்” என்றேன். “பரவால்ல இங்கதான வீடு அஞ்சு நிமிஷத்துல போயிடுவேன். உனக்கென்ன இப்ப...நான் உட்கார்ந்திருக்கேன்; காலேஜிலதான் உம்மணாம்மூஞ்சியாட்டம் பேசவே மாட்ட; இப்பயாவது பேசு, நான் கேட்கிறேன்; பாலாவோட என்ன புக் படிச்சிட்டிருக்க?” என்று கேட்டார். சிவு-வின் வீடு, பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து நிமிட நடையில், கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் பக்கத்திலிருந்தது. நான் “திருப்பூந்துருத்தி” என்றேன். ”நல்லாருக்கா, என்ன கதை?” “எனக்கு புக் படிக்கத்தான் தெரியும், சரியா சொல்லவராது. நல்லாருக்கு. முடிச்சதும், தர்றேன்” என்றேன்.

பேச்சு, சுற்றிச் சுற்றி, கல்லூரி, நண்பர்கள் மத்தியிலேயே சுழன்றது. கல்லூரி வாழ்க்கையில், சிவு மாதிரி, ஒரு நெருக்கமான, வெளிப்படையான, எதுவென்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு பெண் நட்பு கிடைத்தது கடவுள் தந்த வரம். சமயங்களில் ப்ராக்டிகல் ரிகார்டு பண்ணித் தரச் சொல்லியிருக்கிறேன். “அன்னன்னிக்கு நடத்துறத அன்னன்னைக்கு கொஞ்சமாவது ரூம்ல திருப்பிப்பாரு. ட்ரைமெஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குற வரைக்கும் தூங்காத...” என்று கடிந்துகொண்டிருக்கிறார். “எனக்கென்னவோ, நீ மேனகாவப் பாத்து ஜொள்ளு விடறமாதிரி இருக்கு...” என்றார் ஒரு நாள்.

சிவு, வேளாண் பொறியியல் படிக்கும் ஒரு நண்பர் குழுவுடன் மிகவும் நெருக்கம். அக்குழுவில் குரு, சாந்தி, பழனி, சரஸ்வதி, ஹேமா, குமார் இன்னும் சிலருண்டு. சிவு நட்பாய் எல்லோருக்கும் நெருக்கம் என்றாலும், குமாரின் மேல் நட்பு தாண்டிய ஒரு ப்ரியம் உண்டு. குமார் குடும்பத்தில், குமார்தான் முதன்முதலில் தலையெடுத்து, கல்லூரி வரை வந்திருப்பவன்; ஏழைக் குடும்பம். குடும்பப் பொறுப்புகள் அதிகம். ஒருமுறை சிவு, வகுப்பு இடைவேளையில், செமினார் ஹாலுக்கு வெளியே சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது “நான் குமார்கிட்ட லவ்வ சொல்லிட்டேண்டா” என்றார். நான் புன்னகைத்து “என்ன சொன்னான்?” என்றேன். “நான் யோசிச்சி சொல்றேன்”னான். எனக்கு பொறுப்புகள் ஜாஸ்தி. என்னோட குடும்ப சூழ்நிலை தெரியும்தான? இது சரிவருமான்னு தெரியல”-ன்னான். ”எனக்கு இன்னும் அவன்மேல இருக்குற மதிப்பு ஜாஸ்தியாயிடுச்சு” என்றார். ”உனக்கு என்ன தோணுது? நான் ஏதும் அவசரப்பட்டு அவனை தொந்தரவு பண்ணிட்டேனோ...” என்று கேட்டார். “எனக்குத் தெரியல சிவு. நீயா சொல்லிட்டது நல்லதுதான்னு படறது. எனக்கு இந்த வயசுல காதலப் பத்தி தெளிவா ஒரு முடிவுக்கு வரமுடியல. நான் கனவுலயே இருக்கேன்னு விஸ்வா சொல்றான். எந்த நேரமும் கலைஞ்சி கீழ இறங்கிடுவே, கவனமாயிரு”-ன்னு பதட்டப்பட வைக்கிறான். குமார்கிட்ட சொல்லிட்டதான, பார்ப்போம். எல்லாம் சரியா வரும்னுதான் எனக்கு தோணறது” என்றேன். “உனக்கு லவ்வெல்லாம் வரலையா?” சிரித்துக்கொண்டே சிவு கேட்டார்.

“உன்ன மாதிரி நெருக்கமா நட்பிருக்கும்போது லவ்வுக்கு என்ன அவசரம்?” என்றேன். ”ஃபிஸிகல் காண்டாக்ட், அது சார்ந்த முயற்சிகள் எல்லாம் வேடிக்கையாத்தான் தோணுது சிவு. இப்போதைக்கு எனக்கு தூரமாத்தான் இருக்கு. நான் சோகமா இருக்கும்போது “ஏண்டா, ஏதாவது ப்ரச்னையான்னு” கேட்டு நீ கைபிடிச்சுக்குவயே...அன்பு பூசின அந்த மாதிரி தொடல்களே எனக்குப் போதும்” என்றேன். “சரி...சரி...உன் தத்துவங்களை ஆரம்பிச்சிராத...” என்று நிறுத்தினார்.

பஸ்ஸில் இருக்கைகள் நிரம்பியிருந்தது. கண்டக்டர் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். நான் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவுவின் வலதுகை விரல்களைப் பிடித்துக்கொண்டு “அப்பாகிட்ட சொல்லிட்டியா சிவு, குமாரப் பத்தி?” என்று கேட்டேன். “சொல்லிட்டேன். ரெண்டு மூணு மாசமாகும் பதில் சொல்ல. ப்ராக்டிகலா யோசிக்கணும். அதுவரைக்கும் அமைதியா இருக்கச் சொல்லியிருக்கிறார்” என்றார். நான் மனதுக்குள் சிவு-வின் அப்பாவை வணங்கிக்கொண்டேன்.

பஸ்ஸினுள் ட்ரைவர் ஏறினார். ‘சரி, நான் கிளம்பறேன். வீட்ல அம்மா, பாட்டி, தம்பிங்க எல்லோரையும் விசாரிச்சதா சொல்லு” கைபிடித்து அழுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து சிவு இறங்கிக்கொண்டார். பஸ் கிளம்பி மெதுவாய் நகர்ந்தது. சிவு ரோடு தாண்டி மறுபுறம் போய் கடைவீதி தெருவில் நுழைந்து திரும்பி நின்று கையசைத்தார். நானும் பஸ்ஸினுள்ளிருந்து கையசைத்தேன். சிவு-வின் வெள்ளை சுடிதாரும், வானவில் கலர் துப்பட்டாவும் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் பளபளப்பு ஏறித் தெரிந்தது. எனக்கு அலங்காநல்லூரில் டாக்டர் அத்தை வீட்டு முன் இருக்கும் மரமல்லி ஞாபகம் வந்தது. எனக்குப் பிடித்த மல்லிகள் கீழே உதிர்ந்து கிடக்கும் மரம்...

சிவு...என் ப்ரியமான தோழியே...

Episode 5