Difference between revisions of "Anitha M"

From HORTS 1993
Jump to navigation Jump to search
 
Line 17: Line 17:
</pre>
</pre>


=By kalavathi=
=By Kalavathi=


வருகை பதிவேட்டில் முந்தி நிற்கும் உன் பெயர்.
வருகை பதிவேட்டில் முந்தி நிற்கும் உன் பெயர்.

Latest revision as of 20:05, 1 November 2023


  • Passed Away on 20th Oct 2023
Screenshot 2023-10-23 200822.png

Tribute to Anitha

Addres

  • Rituals: 5 November 2023 9am to 1pm
Ramanatham, 
#28 A, Bhavans South Road, Near Bhavans school, Deshabimani Road, Elamakkara.
Ernakulam

By Kalavathi

வருகை பதிவேட்டில் முந்தி நிற்கும் உன் பெயர். வாழ்க்கை பயணத்திலும் முந்திக் கொண்டு விடை பெற்று விட்டாய். கல்லூரி படிப்பை முடித்தவுடன் நமது வகுப்பில் உனக்குத் தான் முதலில் திருமணம் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டே அழகான ஆண் குழந்தை. குழந்தை போன்ற முக அமைப்பை கொண்ட உனக்கு உனது மறுவுறுவமாகவே வந்து பிறந்தான் மகன் அக்ஷய்.

மென்மையும் இலேசான புன்னகையும் பெரும் அமைதியும் குடி கொண்டு இருக்கும் அழகான முகம் உன்னுடையது. எனக்கு தெரிந்தவரை எதற்கும் நீ அதிகம் உணர்ச்சி வசப்பட மாட்டாய்...! படிக்கும் காலங்களில் நான் அறிந்த அனிதா அதிர்ந்து பேசி பார்த்ததில்லை. எப்பொழுதாவது இலேசாக முகம் சுளிப்பாய்....அது கூட மிகச் சில நொடிகளுக்குள் மறைந்து விடும். எப்பொழுதும் ஒரு பேரமைதி உனக்குள் உறைந்திருக்கும்.

சீக்கிரமாகவே வாழத் தொடங்கிய நீ இவ்வளவு சீக்கிரமாகவே விடை பெறுவாய் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை...! ஒரு சில ஆரோக்கிய குறைபாடுகள் இருந்த போதும் நீ எக்காரணம் கொண்டும் நம் குழுவை ( புலனம் ) விட்டு விலகியதில்லை...! தேவையான சமயங்களில் உன் இருப்பை எங்களுக்கு முடிந்தவரை உணர்த்திக் கொண்டு தான் இருந்தாய்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்... நான் உன்னை உன் மகனோடு கொச்சியில் சந்தித்தது. பல வருட இடைவெளிக்குப் பிறகு நிகழ்ந்த அந்த சந்திப்பே நம் இறுதி சந்திப்பாக அமைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை.

கடந்த சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக கேள்விப்பட்டேன். உன் மனம் எப்படியெல்லாம் வேதனைப்பட்டு இருக்கும் என்பதை ஒரு தாயாக என்னால் உணர முடிகிறது. அந்த மகனுக்கு இந்த கடுமையான நாட்களை கடக்க கடவுள் தான் துணை புரிய வேண்டும். ஒரு தாயாக நானும் அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் .

உன் மறைவு செய்தி வாசித்த நொடியில் இருந்து, நெஞ்சம் ஒரு தடுமாற்றத்துடனே இருக்கிறது. ஏதோ ஒரு வெறுமை...! இதயத்தில் எங்கோ ஒரு வேதனை இருந்து கொண்டே உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இருந்தவள் இன்று இல்லை...! எல்லோரும் முன்னபின்ன ஒரு நாள் போக வேண்டியவர்கள் தான். நிரந்தரமாக யாரும் இருக்கப் போவதில்லை. இது தான் உலக நியதி...! புரிகிறது... இருப்பினும் நாம் இருக்கும் வரை யாரையும் இழக்க விரும்பாத ஒரு மனது நமக்குள் இருக்கிறதே...! அதை எப்படி ஆறுதல் படுத்துவது ...😔

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை உனது வீட்டில் நாங்கள் எல்லோரும் தங்கி இருந்தோம். உணவு வேளை முடிந்து தொலைக்காட்சியில் சிவாஜி படம் ஒன்றை நாம் அனைவரும் உன் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்த ஞாபகங்கள் பசுமையாக அல்ல...பாரமாக வந்து போகிறது...😔.

உனது பதினாறாவது நாள் வழிபாட்டிற்கு நம் நட்புகள் சில உன் இல்லம் வர தயாராகிறார்கள். என் போன்று சூழ்நிலை காரணமாக வர முடியாத நட்புகளும் இருக்கும் இடத்தில் இருந்தே உனது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையை ஏறெடுக்கிறோம்...!

எனதருமை தோழியே...சாந்தி பெறுவாய்...!

எண்பதுகளில் இறுதி யாத்திரையை எதிர் நோக்கிய காலங்கள் மாறி ஐம்பதுகளிலேயே வாழ்க்கை முடிந்து போகும் ஒரு மோசமான கால கட்டத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...😟 என்ன செய்வது...? எதை மாற்ற‌ முடியும் நம்மால்...! வியாதிகள் வயதை பார்த்து வருவதில்லை இப்பொழுதெல்லாம்...! இருப்பினும் நீ மிக ஜாக்கிரதையாகத் தான் இருந்தாய். அதை நான் அறிவேன். திருவனந்தபுரம் வந்த பிறகு உனக்கும் எனக்குமான நட்பில் கூடுதலாக ஒரு ஒட்டுதல் ஏற்பட்டது. கைபேசியில் பேசிக் கொள்வோம். சந்தித்தும் கொண்டோம். அப்பொழுதெல்லாம் உருவத்தில் மட்டுமல்ல... உன் பேச்சிலும் நடவடிக்கையிலும் என்னால் சிறு மாற்றத்தைக் கூட உணர முடியவில்லை. அதே அனிதா....! எங்கள் கல்லூரி கால அனிதா...!

அன்பு... அமைதி...அழகு.... இவற்றின் மறுவுறுவம் தான் நாங்கள் அறிந்த அனிதா அனிதா அனிதா...!!!🙏🏻

( உனக்கான பிறந்தநாள் வாழ்த்து இப்படி இரங்கற்பா வாக மாறும் என்பது யாருமே எதிர்பார்க்காதது...😥)

எங்கிருந்தாலும் என்றும் உன் நினைவுகளுடன் உனது கல்லூரி நட்புகள்...❤😔🙏🏻.